நெல்லை-தென்காசி சென்ற அரசுப் பேருந்து விபத்து 30 பேர் காயம்!

நெல்லையில் இருந்து தென்காசி நோக்கி சென்ற அரசு பேருந்து ஆலங்குளம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.

35-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அந்த அரசுப்பேருந்து போது நல்லூர் விலக்கில், சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணித்த ஒருவர் உயிரிழந்தார். கல்லூரி மாணவ, மாணவியர் உள்ளிட்ட 30 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மழை காரணமாக சாலை ஓரங்களில் சேறும் சகதியுமாக இருந்த நிலையில், முன்னால் சென்ற தனியார் பள்ளி வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டபோது பேருந்து கவிழ்ந்ததற்கு காரணம் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

More News >>