ஜெ. மரண விசாரணை - சசிகலா ஆஜராக மாட்டார்!

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் சசிகலா சார்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு 22ஆம் தேதி இரவு சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். 75 நாட்களுக்குப் பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி அவரது உயிர் பிரிந்ததாக அப்பல்லோ நிர்வாகம் அறிவித்தது.

ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு தரப்பினரும் சந்தேகம் எழுப்பியிருந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படுமென்று அறிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் விசாசரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஜெயலலிதா சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சையை மேற்பார்வையிட தமிழக அரசு சார்பில் மருத்துவர்கள் பாலாஜி, தர்மராஜன், கலா, முத்துசெல்வன், டிட்டோ ஆகியோர் அடங்கிய மருத்துவக்குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவில் இடம்பெற்ற மருத்துவர்களுக்கு ஆணையம் அனுப்பிய சம்மன் அடிப்படையில் அவர்கள் அனைவரும் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் சசிகலா சார்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என தகவல் வெளியானது. இந்நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தில் தினகரன் சார்பில் பென்டிரைவை சமர்பித்தார் ராஜா செந்தூர்பாண்டியன்.

இது குறித்து தெரிவித்துள்ள வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், “தினகரன் சார்பாக ஆஜராகி பென்டிரைவ் ஒன்றை விசாரணை ஆணையத்தில் சமர்பித்துள்ளேன். வெற்றிவேல் வெளியிட்ட வீடியோ உட்பட பல வீடியோக்கள் சமர்பித்துள்ளோம்.

வரும் 23ம் தேதி சசிகலா சார்பாக நான் விசாரணை ஆணையத்தில் விளக்கமளிக்க உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

More News >>