பாகுபலி நாயகன் பிரபாஸின் பிறந்த நாள் இன்று!

பாகுபலி நாயகன் பிரபாஸின் 39வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்திய திரையுலக ஜாம்பவான்கள் தொடங்கி, நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் பிரபாஸுக்கு சமூக வலை தளங்களில் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

டோலிவுட்டில் சாம்ராஜ்யம் அமைத்துள்ள பிரபாஸ், 1979ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ம் தேதி சென்னையில் பிறந்தவர் என்பது கூடுதல் சிறப்பு. தற்போது ஹைதராபாத்தில் உள்ள ஃபிலிம் நகரில் வசித்து வருகிறார் பிரபாஸ்.

பாகுபலி படத்தின் மூலம் இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக மாறியுள்ள பிரபாஸ் நடிப்பில் 'சாஹோ' படம் உருவாகி வருகிறது. பாகுபலி 2விற்கு பிறகு பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படத்திற்காக பிரபாஸ் ரசிகர்கள் ஆர்வமாக காத்து கொண்டிருக்கின்றனர்.

அடுத்த ஆண்டில் திரைக்கு வரவுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் டீசர் பிரபாஸ் பிறந்த நாளில் வெளியாவதாக சமீபத்தில் தகவல் வெளியாகி வந்தன.

ஆனால் தற்போது இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை பிரபாஸ் பிறந்த நாளில் வெளியிடுவதாக படக்குழு நேற்று அறிவித்தது. இதனால், பிரபாஸின் பிறந்த நாளை கொண்டாடி வரும் ரசிகர்களுக்கு சாஹோ மேக்கிங் வீடியோ மூலம் டபுள் ட்ரீட் காத்துக் கொண்டிருக்கிறது.

இதெல்லாம் இருக்கட்டும் எப்போ கல்யாணம் பிரபாஸ்?

More News >>