ஆட்சி நடத்தும் ஆன்மா! எங்கேனு தெரியுமா?

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு நியாயமான தீர்ப்பு என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் கடிதம் கொடுத்தனர். இதனால் சபாநாயகரால் 18 எம்எல்ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, விசாரணை நடைபெற்று வந்தது. பின்னர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த வழக்கு தொடர்பாக விசாரித்த இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.

வழக்கின் விசாரணை ஏற்கெனவே முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் தனபாலின் உத்தரவு செல்லும் எனவும் சபாநாயகர் முடிவில் தவறு இல்லை எனவும் நீதிபதி எம்.சத்தியநாராயணன் தீர்ப்பு வழங்கினார்.

இது குறித்து அதிமுக தலைவர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தகுதி நீக்க வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு நியாயமான தீர்ப்பு என்றும் அதிமுக ஆட்சியை விமர்சித்தால் ஜெயலலிதாவின் ஆன்மா சும்மா விடாது என்றும், ஜெயலலிதாவின் ஆன்மாவைப்போல் ஆட்சி நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

More News >>