ஆஸ்திரேலியாவில் கைதான 102 வயது தாத்தா!

ஆஸ்திரேலியாவில் 92 வயது பாட்டியை அடித்தாக 102 வயது தாத்தா கைது செய்யப்பட்ட சம்பவம் வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி போண்டி கடற்கரைக்கு அருகே முதியோர் இல்லம் ஒன்று உள்ளது. இங்கு ஒரு நாள் மதிய உணவு நேரத்தின் போது, 92 வயது பாட்டிக்கும் 102 வயது தாத்தாவுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த தாத்தா, பாட்டியை அடித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து முதியோர் இல்ல நிர்வாகிகள் போலீசாரை அழைத்தனர். தகவல் அறிந்து முதியோர் இல்லத்துக்கு விரைந்து வந்த போலீசார், தாத்தாவை கைத்தாங்கலாக மெல்ல கூட்டிச் சென்று கைது செய்தனர். பின்னர், அவரிடம் வாக்குமூலத்தில் கையெழுத்து வாங்கி விட்டு விடுவித்தனர். மேலும், அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டது. ஆனால், சம்பவத்தில் தொடர்புடைய பாட்டி என்ன ஆனார், எதற்கு இந்த சண்டை நடந்தது என்பது குறித்த தகவலை போலீசார் வெளியிட மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. 92 வயது பாட்டியை அடித்தாக 102 வயது தாத்தா கைது செய்யப்பட்டது ஆஸ்திரேலியாவிலேயே இதுதான் முதன்முறையாகும்.

More News >>