விசாகப்பட்டினத்தில் ஜெகன் மோகன் மீது கொலைவெறி தாக்குதல்

விசாகப்பட்டினம் விமானநிலையத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு சென்ற ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி வந்தார். அப்போது, அவரது அருகே வந்த விமானநிலைய ஊழியர் ராஜூ என்பவர் செல்ஃபி எடுக்க முயன்றார். திடீரென மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால், ஜெகன்மோகன் ரெட்டி தோள்பட்டையில் தாக்கினார்.

தோள்பட்டையில் இருந்து ரத்தம் கசிந்ததை தொடர்ந்து ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. தப்பி ஓட முயன்ற ராஜூவை சுற்றி வளைத்து காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் விசாகப்பட்டின விமானநிலையத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

More News >>