அமெரிக்காவில் மனித இரத்தம்,தசை சாப்பிட ஆசைப்படும் மாணவிகள் !

அமெரிக்காவில் பார்டோ பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 2 சிறுமிகள் உடன் படிக்கும் மாணவர்களை கொன்று ரத்தம் குடிக்க திட்டமிட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் பார்டோ பகுதியில் நடுநிலைப் பள்ளியில் படிக்கும் 2 சிறுமிகள் அங்குள்ள பாத்ரூமில் பதுங்கி இருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த பள்ளி ஊழியர்கள் அவர்களை பிடித்து சோதனையிட்டனர். அப்போது அவர்களிடம் கத்தி இருந்தது.

அதை தொடர்ந்து 2 சிறுமிகளும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சிறுமிகள் மனித ரத்தம் குடிக்க விரும்பினர். அதன் பின்னர் அவர்களின் சதையை கடித்து தின்ன விரும்பியதாகவும் கூறினர். அதன் பின்னர் தாங்களும் தற்கொலை செய்து கொள்ளவும் திட்டமிட்டிருந்தனர்

இது ஒருவகை மனநோயின் (ஹியூமன் கேனிபலிசம்) அறிகுறியாக இருக்கலாம். அல்லது திரைப்படங்களின் தாக்கம் கூட காரணமாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் பெற்றோர்களும் அரசாங்கமும் உடனடியாக மருத்துவ ஆலோசனை வழங்க வேண்டும். பிள்ளைகள் வளர்ப்பின் முக்கியத்தும் அறிந்து நல்ல பழக்கவழக்கங்களை சொல்லித்தந்து வளர்க்க வேண்டும்

More News >>