ஜோர்டானில் சோகம்: பள்ளி பேருந்து ஒன்று வெள்ளத்தில் அடித்து சென்றதில் 17 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான ஜோர்டானில் பள்ளி பேருந்து ஒன்று வெள்ளத்தில் அடித்து சென்றதில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்பிரிக்க நாடான ஜோர்டானில் ஷாரா மயீன் என்ற சுற்றுலா தலத்துக்கு 37 மாணவர்கள், 7 ஊழியர்களுடன் ஒரு பள்ளி பேருந்து புறப்பட்டு சென்றது. இவர்களுடன், மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் குடும்பத்தினரும் பயணம் செய்தனர்.

இந்நிலையில், இவர்கள் டெட் சீ எனப்படும் சாக்கடல் பகுதியில் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென வந்த வெள்ளம் பேருந்தை அடித்துச்சென்றது. இதில் இருந்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பலத்த படுகாயங்களுடன் 13 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதற்காக, ஜோர்டன் ராணுவம் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது.

இவர்களுக்கு உதவியாக, அண்டை நாடான இஸ்ரேலின் ராணுவம் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இதுகுறிதது தகவல் அறிநத் பக்ரைன் சென்ற ஜோர்டான் மன்னர் அப்துல்லா சுற்றுப் பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு நாடு திரும்பினார்.

சுற்றுலாச் சென்ற பள்ளிப்பேருந்து வெள்ளத்தில் அடித்துச் சென்ற சம்பவம் அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

More News >>