இந்தியப் படைத் தாக்குதலில் 7 பாகிஸ்தானியர்கள் பலி

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் நடந்த தாக்குதலில் இரு பாகிஸ்தான் வீரர்கள் உள்பட 7 பேர் பலியானார்கள்.

காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய ராணுவ வீரரும் அவரின் மனைவியும் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பழிவாங்கும் நடவடிக்கையான இந்தியா எடுத்த ராணுவ நடவடிக்கை இது எனக் கூறப்படுகிறது. இந்தியாவின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சக்காதா பாக்,காரி கர்மாரா பகுதியில் இருந்து பாகிஸ்தானின் பூஞ்ச் மாவட்டத்தில் தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பாகிஸ்தான் ராணுவத்தின் செக் போஸ்ட் முற்றிலும் அழிக்கப்பட்டது.

தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் இரு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அடங்கும். பதினாறு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களி3 3 பேரின் உடல்நிலைக் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

More News >>