டெல்லியில் சந்திரபாபு நாயுடு - அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு

டெல்லி வந்திருந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை, அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு டெல்லி வந்துள்ளார். அங்குள்ள, ஆந்திரப்பிரதேசம் பவனில் தங்கியுள்ள சந்திரபாபு நாயுடுவை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சந்தித்து பேசினார்.

அப்போது, விரைவில் வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

இதன்பிறகு, அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில், சந்திரபாபு நாயுடுஜி உடனான சந்திப்பு நல்லவிதமாக அமைந்தது. பல்வேறு தேசிய பரச்னைகள் குறித்து சந்திப்பின்போது விவாதித்தோம்.

அரசியமைப்பை அச்சுறுத்தும் வகையில் தற்போதைய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் திரள வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் என அதில் குறிப்பிட்டிருந்தார்.

More News >>