வீட்டிற்குள் தாய்,மகன் கழுத்தறுத்துப் படுகொலை!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் வீட்டிற்குள் புகுந்து பெண் கழுத்தறுத்துக் கொல்லப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோத்தகிரியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர், தனது கணவர் ராஜேஷ் குமார் சவுதியில் வேலைபார்ப்பதால், தனது மூன்றரை வயது மகன் கார்த்திகேயனுடன் ரோஸ் காட்டேஜ் என்ற பகுதியில் வாடைக்கு வீடு எடுத்து தங்கினார். இந்த நிலையில் நேற்றிரவு ராஜேஸ்வரியைப் பார்க்க அவரது தாய், தந்தை சென்றுள்ளனர்.

அப்போது மகள் கழுத்தறுத்து ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கார்த்திகேயனின் கழுத்தும் அறுக்கப்பட்டு இருந்தது. உயிருக்குப் போராடிய சிறுவன் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். இதுகுறித்து கோத்தகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More News >>