என்னையும் பலாத்காரம் செய்ய முயன்றனர் நிவேதா பெத்துராஜ் #MeToo

ஒரு பார்ட்டிக்குப் போனபோது எனக்கும் மீ டூ பிரச்சனை எழுந்தது. பார்ட்டிக்குப் போகாமல் இருந்திருந்தால், பலாத்கார முயற்சியை தவிர்த்திருக்கலாம் என்றார் நடிகை நிவேதா பெத்துராஜ்.

விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் தீபாவளி ரிலீசாக வரவுள்ள திமிரு புடிச்சவன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், தனக்கு நேர்ந்த மீடூ அனுபவங்கள் குறித்து தெரிவித்திருக்கிறார் நிவேதா பெத்துராஜ்.

பத்திரிகையாளர் சந்திப்பில் ‘மீடூ’ விவகாரம் குறித்து நிவேதா பெத்துராஜிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.

அதற்கு,

’பெண்களிடம் யாராவது ஒருவர் தவறாக நடக்க முயன்றால், அந்த இடத்திலேயே எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். ‘மீ டூ’ பிரச்சினையில் நானும் சிக்கி இருக்கிறேன்.

ஒரு பார்ட்டிக்கு போன இடத்தில், அது நடந்தது. நான் துபாயில் வளர்ந்த பெண் என்றாலும், மதுரையை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண். வெட்கம், பயம் காரணமாக நான் அதை வெளியில் சொல்லவில்லை.

தவறு என் மீது தான். நான் அந்த பார்ட்டிக்கு போயிருக்கக் கூடாது. போகாமல் இருந்தால் பலாத்கார முயற்சியை தவிர்த்து இருக்கலாம்.

இப்போது நான் தெளிவாக இருக்கிறேன். அதுபோன்று ஒரு சம்பவம் நடந்தால், என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும்.’ என நிவேதா பெத்துராஜ் பதிலளித்தார்.

 

More News >>