எஸ்.எஸ்.சி மூலம் பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு!

எஸ்.எஸ்.சி (SSC) எனப்படும் ஸ்டாப் ஸ்லெக்‌ஷன் கமிஷன் மூலம் பல்வேறு அரசுத் துறைகளில் குரூப் - பி, குரூப் - சி பிரிவுகளில் உள்ள கிரேடு - சி மற்றும் கிரேடு - டி ஸ்டெனோகிராபர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

கல்வித் தகுதி:

12ஆம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கில அல்லது இந்தி மொழியில் தட்டச்சு பயிற்சி பெற்றிக்க வேண்டும். கிரேடு - டி பணிகளுக்கு 80 வார்த்தைகள்/ஒரு நிமிடம். கிரேடு - சி பணிகளுக்கு 100 வார்த்தைகள்/ஒரு நிமிடம் சுருக்கெழுத்தில் குறிப்பெடுத்து அதை குறித்த நேரத்தில் தட்டச்சு செய்ய வேண்டும்.

வயது வரம்பு:

18 - 27 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். கிரேடு - சி பணிக்கு 30 வயதும் தகுதி ஆகும். 1-1-2019 தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும்.

தேர்வு முறை:

முதலில் எழுத்துத் தேர்வு, அடுத்து ஸ்டெனோகிராப் திறன் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு நடைபெறும்.

கட்டணம்:

விண்ணப்பிக்க ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். (*எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள், பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை)

விண்ணப்பிக்கும் முறை:

https://ssc.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் 19-11-2018. வங்கிக் கட்டணம் செலுத்த கடைசி நாள் 21-11-2018. கணினி தேர்வு 6-2-2019ல் நடைபெறும்.
More News >>