தகுதியை இழந்து பேசுகிறார் கமலஹாசன் - கமல்ஹாசனுக்கு தினகரன் பதில்

தகுதியை இழந்து பேசுகிறார் கமலஹாசன். எனது வெற்றி பற்றி பேசினால், கமல் இங்கே போட்டியிட்டிருக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

‘ஆனந்த விகடன்’ இதழுக்கு எழுதிவரும் தொடரில், கூறியுள்ள கமல்ஹாசன். “ஆ.கே.நகர் இடைத்தேர்தல், ஆகப்பெரிய களங்கம். தமிழகத்துக்கு, தமிழக அரசியலுக்கு, அவ்வளவு ஏன், இந்திய ஜனநாயகத்துக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள மிகப்பெரிய களங்கம். அதுவும் வெளிப்படையாக நடந்த, விலைக்கு வாங்கப்பட்ட வெற்றியை ஊழல் என்றுகூட சொல்லமாட்டேன்.

நின்ற தேர்தல் மீண்டும் நடந்தபோது, ஆளும் தரப்பு ஆறாயிரம், யாருடைய தயவும் இன்றி சுயமாகவே வளர்ந்த (!) சுயேச்சை தரப்பு இருபதாயிரம் என்று… ஆர்.கே. நகரின் ஒவ்வொரு வாக்காளருக்கும் இருதரப்பும் விலை நிர்ணயித்தன.

தங்களின் தலைக்கு அதிக விலை நிர்ணயித்த சுயேச்சையை, ‘தங்களின் தேவைகளைத் தீர்க்க வந்த தேவன் வந்துவிட்டான்’ என்று பொத்தானை அழுத்தி, தங்களுக்குத் தாங்களே உலைவைத்துக் கொண்டுள்ளனர் ஆர்.கே.நகர் வாசிகள்” என்று தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் இது குறித்து கூறியுள்ள டிடிவி தினகரன், “பணம்தான் ஜெயித்தது என்றால் இரட்டை இலைதான் ஜெயித்திருக்க வேண்டும். மக்களை தரம் தாழ்ந்து குறை சொல்கிறார். தகுதியை இழந்து பேசுகிறார் கமலஹாசன். எனது வெற்றி பற்றி பேசினால், கமல் இங்கே போட்டியிட்டிருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

More News >>