சர்ச்சைக்குரிய புகைப்படங்களை வெளியிட்ட சீரியல் நடிகை!
பிரபல இந்தி சீரியல் நடிகை ஸ்வேதா சால்வே புகைபிடிக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
இந்தி சீரியல்களில் அம்மா கேரக்டரில் நடித்து வரும் ஸ்வேதாவிற்கு நிஜமாகவே ஒரு குட்டி குழந்தையும் இருக்கின்றது. ஆனால், இவரோ, அடிக்கடி அதிக அளவில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் பிகினி உடையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வந்து விமர்சனத்திற்கு உள்ளானார். அவரது மகள் ஆர்யாவுக்கு இது தவறான எடுத்துகாட்டாக அமைந்துவிடும் என ரசிகர்கள் ட்ரோல் செய்தனர்.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அவர் மேலும் சில சர்ச்சை புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். "ஆமாம் நான் குடிப்பேன், புகை பிடிப்பேன்." எனக் கூறி அந்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
மிகவும் படுகவர்ச்சியான பிகினி உடையில் புகைப்பிடிக்கும் படத்தையும், மது அருந்தும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். மேலும், ஆர்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, நான் நல்ல அம்மாவாகவும் என் குழந்தைக்கு இருக்கிறேன். உங்களது ஃப்ரீ அட்வைஸ் எனக்கு வேண்டாம் என்றார்.