எட்டப்பர்கள் சதி பலிக்காது எடப்பாடியார் குற்றசாட்டு!

அதிமுகவை உடைக்க எட்டப்பர்கள் சிலர் செய்த சதியால் பாதை மாறி சென்றவர்களை கழகத்தில் சேர மீண்டும் அழைத்துள்ளோம் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழக முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில் அதிமுகவை உடைக்க எட்டப்பர்கள் செய்த சதியால் பாதை மாறி போனவர்களை மீண்டும் அழைத்துள்ளோம். அதிமுக தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் பயமே கிடையாது. ஜெயலலிதா இல்லாததால் எங்களை மிரட்டி ஆட்சிக்கு களங்கம் விளைவிக்க முயல்கிறார்கள்.

கட்சி உடையும் ஆட்சி கவிழும் என கனவு கண்ட எட்டப்பர்கள் சதி பலிக்கவில்லை என்றார்.மேலும் டிடிவி தினகரன் அதிமுக உறுப்பினர் இல்லை என்பதால், அதிமுகவில் சேர அவருக்கு அழைப்பு விடுக்கவில்லை என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.

More News >>