சென்னையில் தொடர்ந்து கனமழை: 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என தகவல்

சென்னையில் பல்வேறு இடங்களில் இரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழை முடிந்து விரையில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று, நாளை என கடந்த இரண்டு வாரங்களாக வடகிழக்கு பருவமழை தாமதித்து வருகிறது.

இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று இரவு முதல் சென்னையின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது: தென்மேற்கு மத்திய வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு வலுப்பெற இருப்பதால், அடுத்த இரண்டு நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றார்.

சென்னை பொறுத்தவரை, இரவு முதல் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது என்றும், இன்று பகல் நேரத்தில் மிதமான வெயில் அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

More News >>