படேலின் 143வது பிறந்தநாள் கொண்டாட்டம்: தேசிய ஒற்றுமை ஓட்டம் தொடங்கியது

சர்தார் வல்லபாய் படேலின் 143வது பிறந்தநாளையட்டி, இன்று நாடு முழுவதும் தேசிய ஒற்றுமை ஓட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லாபாய் படேலின் 143வது பிறந்தநாள் இன்று தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நாடு முழுவதும் தேசிய ஒற்றுமை ஓட்டம் நடைபெற்று வருகிறது.

டெல்லியில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர், டெல்லியில் இந்தியா கேட் பகுதியில் தேசிய ஒற்றுமை ஓட்டத்தை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரதோர் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இதில், விளையாட்டு வீராங்கனை தீபா கர்மாகர் உள்பட பல்வேறு விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.

இதேபோல், சென்னையில், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தேசிய ஒற்றுமை ஓட்டத்தை தொடங்கி வைத்தனர்.

அசாம், ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் அம்மாநில முதல்வர்கள் ஓட்டத்தை தொடங்கி வைத்தனர்.

More News >>