தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமலை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் மழைபெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை முதலில் கடலோர பகுதிகளில் தொடங்கும் என்றும் பிறகு மற்ற இடங்களில் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தின் கடலோர மாடவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

More News >>