தீபாவளி முன்னிட்டு 5ம் தேதி வரை ரேஷன் கடைகள் தொடர்ந்து செயல்படும்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் தொடர்ந்து செயல்படும் என்று தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை முன்னிட்டு வரும் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்கிழமை அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசு பணியாளர்கள் வெளியூர்களுக்கு செல்வதால், வரும் திங்கட்கிழமை ரேஷம் கடைகள் இயங்காது என கூறப்பட்டது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகை முன்னிட்டு மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் வரும் நவம்பர் மாதம் 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை தொடர்ந்து செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

More News >>