மனித மாமிசத்தை உண்ண முயன்றவன் கைது. இவன் மனிதனா? மிருகமா?

உக்ரைன் நாட்டிலுள்ளது சாவ்டிவ்கா என்ற ஊர் உள்ளது. இவ்வூரில் தலையில்லாமல் காவலாளியின் உடலானது அடுக்குமாடி குடியிருப்பு பக்கத்தில் கிடந்துள்ளது. அதனால் அருகில் உள்ள மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையினர் விரைந்து வந்து கொலைக்கான விசாரனையை நடத்தினர். அப்போது நடத்திய விசாரனையில் அவர்களுக்கு கிடைத்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதாவது அந்த உடலின் அருகிலேயே தலையை வெட்டிய கத்தியும் அவர்களுக்கு கிடைத்துள்ளது. இதுப் பற்றி காவல் துறையினர் துப்பறிந்த போது கொலை செய்யப்பட்டவர் கடந்த 4 ஆம் தேதி இரண்டு பேருடன் இணைந்து மது அருந்திவிட்டு தன் வீட்டிற்கு சென்ற பிறகுதான் அவர் காணாமல் போனதாக தெரியவந்தது.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் அந்த இருவரின் வீட்டிற்கும் சென்று விசாரித்துள்ளனர். அப்போது அவ்வீட்டிலுள்ள  தன் தந்தைக்கு எதிராக மகன் குற்றம் சாட்டியுள்ளார்.

அதன்பிறகு அவர்களின் வீட்டில் நரமாமிசம் மற்றும் கால், கை எலும்புகள் எல்லாம் சமையலறையில் உள்ள குக்கரில் சமைத்து உண்பதற்கு தயார் நிலையில் இருந்துள்ளது. இதனால் முன்பு செய்த ஒரு கொலை வழக்கிலும் அந்த நபர் (தந்தை) மீது குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு 10 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

More News >>