போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் போராட்டம் நடத்த முடிவு

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதை அடுத்து, போராட்டம் நடைபெறும் தேதி நாளை அறிவிக்கப்படும என்றும் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த இரண்டு முறை வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர். முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, போராட்டங்களை கைவிட்டனர்.

இந்நிலையில், நேற்று போக்குவரத்து தொழிலாளர்கள் உடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது என்று தமிழக அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் சென்னையில் இதனை தெரிவித்தனர்.

இதுகுறித்து மேலும் கூறியதாவது: தீபாவளிக்கு முன்பணம் வழங்குவது குறித்து தமிழக அரசு எந்த ஒரு வாக்குறுதியும் அளிக்கவில்லை. தமிழக அரசு இழுத்தடிப்பதாகவும், அடுத்தக்கட்ட பேச்சு வார்த்தை தேதியை கூட அரசு தரப்பு அறிவிக்கவில்லை. முன்னதாக கடந்த 29ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது ஒத்துக் கொண்ட தொகையை கூட தமிழக அரசு தர மறுக்கிறதுஉ வேலை நிறுத்தம் செய்வது குறித்து நவம்பர் 2ம் தேதி அறிவிக்கப்படும். இவ்வாறு போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

More News >>