பாஜக தோற்பது உறுதி- சந்திரபாபு நாயுடு

நாடாளுமன்ற தேர்தலில் மோடி அரசு கண்டிப்பாக தோல்வியை தழும் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

கடப்பா மாவட்டதில் நடைபெற்ற தெலுங்கு தேசம் கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் "ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தரப்படும் என்று அளித வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்ற வில்லை என்றார்.மேலும் மாநில அரசுகளை வஞ்சித்து வரும் பாஜக 2019 நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் தோற்கும்" என்று குறிப்பிட்டார்.

பாஜக-விற்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். கடப்பா மாவட்டத்தில் ஸ்டீல் தொழிற்சாலையை அமைக்காமல் மத்திய அரசு ஏமாற்றி வருவதால், மாநில அரசே அமைக்க உள்ளதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். முன்னதாக மோடி அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் சந்திரபாபு நாயுடுதான் கொண்டுவந்தார் என்பது குறிப்பிடதக்கது.

More News >>