போக்குவரத்து தொழிலாளர்களுடன் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: கமல்ஹாசன் ட்வீட்

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை மனதில் கொண்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என நடிகர் கமல் ஹாசன் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ட்விட்டர் மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.

ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து திமுக உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று இரவு முதல் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், தமிழகம் முழுவமு ஒரு சில பேருந்துகள் மட்டுமே இயங்குகின்றன. பெரும்பாலான பேருந்துகள் இயக்காததால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

பேருந்து ஸ்டிரைக் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர், மக்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளையும் மனதில் கொண்டு தயவாய் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பொங்களுக்கு அதுவே அரசு தரும் விலைமதிப்பில்லா பரிசாகும்.இவ்வாறு கமல் கூறியுள்ளார்.

More News >>