தனியார் பள்ளி ஆசிரியை கழுதறுத்துப் படுகொலை!

கும்பகோணத்தில் தனியார் பள்ளி ஆசிரியர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.

25வயதான இளம்பெண் வசந்தப்பிரியா கும்பகோணம் செட்டி மண்டபத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். எப்பொழும் போல இன்று காலை பள்ளிக்கு வந்த பிரியா மாலையில் இளைஞர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த போது அந்த நபர் சிறிய கத்தியால் வசந்தப்பிரியாவின் கழுத்தை அறுத்துள்ளார்.

ரத்தம் சொட்ட சொட்ட அலறியப்படி சாலையிலேயே விழுந்து உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீஸ் வசந்தப்பிரியாவின் உடலை மீட்டனர்

வசந்தப்பிரியாவுக்கு கடந்த மாதம் 28ம் தேதி நிச்சயதார்த்தம் முடிந்தது, இதனால் இது காதல் பிரச்சனையாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளார்கள்.மேலும் தப்பி ஓடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தினமும் கடந்து செல்லும் சாதாரண செய்தியாக மாறிவிட்டது பெண்கள் மீது நடத்தப்படும் கொடுமைகள், ஒரு உயிரை எடுக்கும் அளவு அப்படி என்ன வன்மம், ஒரு உயிர் எடுத்து, நிங்களும் ஜெயிலுக்கு செல்வதால் யாருக்கு லாபம் என்று யோசித்து பாருங்கள் ஒருவர் உங்களை நிராகரித்தால் வாழ்க்கையில் முன்னேறி செல்வது எப்படி என்று பார்த்து அதற்கான முயற்சிகளை ஏடுப்பதுதான் அனைவருக்கும் நலம்.

More News >>