தீபாவளி முன்னிட்டு தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில்

தீபாவளி கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்தது.

தீபாவளி பண்டிகை வரும் 6ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதனால், வரும் 5ம் தேதியும் அரசு விடுமுறை விடுத்து தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இதனால், சொந்த ஊருக்கு சென்று தீபாவளி கொண்டாடும் மக்கள் இந்த நான்கு நாட்கள் விடுமுறையை பயன்படுத்திக் கொள்கின்றனர்.

சென்னையில் இருந்து தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் குடும்பத்தோடு சொந்த ஊர் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தமிழக அரசு ஆயிரக்கணக்கான சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது.

இதேபோல், தெற்கு ரயில்வேயும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி, சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் ஏற்கனவே அறிவித்தது.இந்த சிறப்பு ரயில் சென்னை தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு வரும் 3ம் தேதி மற்றும் 5ம் தேதிகளில் காலை 9.30 மணிக்கு புறப்படுகிறது. இதேபோல், மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு 4ம் தேதி மற்றும் 7ம் தேதிகளில் காலை 7.10 மணிக்கு புறப்படுகிறது.

More News >>