தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. பருவமழை தீவிரமடைந்து வருவதால், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பல இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் ஸ்டெல்லா கூறியதாவது: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் காற்றழுத்த பகுதி நீடிக்கிறது. தென் தமிழகத்திலும் அதனை ஒட்டியுள்ள பகுதியிலும் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இது படிப்படியாக அதிகரித்து 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை கனமழையாக பெய்யத் தொடங்கும். தற்போதுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெற்ற 6ம் தேதி புயலாக மாறி காற்றுடன் கூடிய மழையாக பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஓட்டியுள்ள கடலோர கர்நாடகாவில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு மற்றும் கேரளா, தெற்கு கர்நாடகா, ஆந்திராவின் ராயலசீமா பகுதிகளிலும் தொடங்கி உள்ளதாக தெரிவித்தனர்.மேலும், சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மதிமான மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.

More News >>