இந்தோனேசியா விமான விபத்து: நீர்மூழ்கி வீரர் பரிதாப பலி

இந்தோனேசியாவில் லயன் ஏர் விமானம் விபத்துக்குள்ளான ஜாவா கடல் பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த நீர்மூழ்கி வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இருந்து சுமத்ரா தீவில் உள்ள பங்ங்கால் பினாங்கு நகருக்கு சென்ற லயன் ஏர் பயணிகள் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கடலில் விழுந்து நொறுங்கியது. இதில், சம்பவ இடத்திலேயே பயணம் செய்த 189 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மீட்பு படையினர் உடனடியாக விபத்துக்குள்ளான இடத்திற்கு சென்று 79 உடல்களை மீட்டனர். மேலும், விமானத்தின் கருப்புப் பெட்டி, தரவு பதிவு உள்ளட்டவை மீட்டுள்ளனர். கடலின் அடியில் சிக்கியுள்ள சடலங்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்நிலையில், இந்தோனேசியாவை சேர்ந்த நீர்மூழ்கி வீரர் ஒருவர் மீட்புப் பணியின்போது பரிதாபமாக உயிரிழந்தார்.

சியாசுருல் ஆன்டோ (48) என்ற வீரர் தேடுதல், மீட்பு நிறுவனத்தின் தன்னார்வலர் என்றும், காற்றழுத்தம் குறைந்த்தால் அவர் உயிரிழந்திருக்கலாம் என்றும் கடற்படையின் தேடுதல் மற்றும் மீட்பு பிரிவு கமாண்டர் கூறியுள்ளார்.

More News >>