சர்கார் வெற்றிபெற காஞ்சிபுரத்தில் ஏ.ஆர். முருகதாஸ் சாமி தரிசனம்!

சர்கார் படம் தீபாவளியன்று வெளியாகவுள்ள நிலையில், படம் மாபெரும் வெற்றி பெற காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் ஏ.ஆர். முருகதாஸ் வழிபாடு நடத்தினார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தீபாவளிக்கு சர்கார் படம் ரிலீசாகிறது. சர்கார் கதை விவகாரம் பூதாகரமான நிலையில், இப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் ரொம்பவே அப்செட் ஆகியுள்ளார்.

இந்நிலையில், படத்திற்கு அரசியல் ரீதியாகவோ, மற்ற வழியிலோ பட ரிலீசுக்கு எந்தவித பாதிப்பும் வரக்கூடாது என்பதற்காக காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் நேற்று சாமி தரிசனம் செய்தார். கோயிலுக்குள் தனியாகவே வந்த ஏ.ஆர். முருகதாஸை யாரும் அடையாளம் கண்டு கொள்ளவில்லை.

பின்னர், அர்ச்சகர் ஒருவர் அடையாளம் கண்ட நிலையில், சிலர் அவருடன் செல்ஃபி மற்றும் புகைப்படங்களை எடுத்தனர். கூட்டம் கூடுவதற்குள் கிளம்பி விடவேண்டும் என்று எண்ணிய அவர், அடுத்த 10 நிமிடத்திற்குள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

More News >>