இரண்டாம் திருமணத்திற்கு தயாரான அமலா பால்!

பிரபுசாலமன் இயக்கத்தில் மைனா படத்தில் அறிமுகமான அமலா பால், தெய்வதிருமகள் திரைப்படத்தில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடித்த போது இருவருக்கும் ஏற்பட்ட காதல் 2014 ஜூன் 12ல் திருமணத்தில்முடிந்தது.

பின்பு இருவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தில் அந்த காதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. அமலா பால் திருமணத்திற்கு பிறகு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசைதான் காரணம் என்று பேசிக்கொண்டார்கள்

இதையடுத்து அம்மா கணக்கு திரைப்படம் மீண்டும் அமலா பாலுக்கு நல்ல ரி-என்டிரியாக அமைந்தது. எனவே அவர் மீண்டும் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என பிஸியாகி விட்டார். தற்போது இவர் ஆடை படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது அவர் இரண்டாம் திருமணத்திற்கு தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 3 ஆண்டுகளுக்கு பிறகு அமலா பால் எடுத்துள்ள முடிவு"நானாக விரும்பி செய்த எனது முதல் திருமணம் சரியாக அமையவில்லை, அதனால் எனது இரண்டாம் திருமணம் பற்றி எனது தாய் தந்தையிடம் விட்டுவிட்டேன் என்று கூறினார், மேலும் அவர்கள் யாரை சொன்னாலும் திருமணம் செய்வேன் என்று கூறியுள்ளார். இயக்குனர் விஜய்க்கு ஏற்கனவே மறுமணத்திற்கு பெண் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இன்று வரை இவர்கள் இருவரும் தங்கள் விவாகரத்திற்கான காரணத்தை வெளிப்படையாக கூறவில்லை

More News >>