பீகாரில் பயங்கரம்: எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து

பீகார் மாநிலத்தின் தனாப்பூர் நிலையம் அருகே இன்று மாலை ஜன் சதாரன் எக்ஸ்பிரஸ் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.

பீகார் மாநிலத்தின் செயற்கைக்கோள் நகரம் என்று அழைக்கப்படும் தனாப்பூர் நிலையத்தில் இருந்து டெல்லியின் ஆனந்த் விஹார் பகுதியை இணைக்கும் வகையில் சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு ஜன் சதாரன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.

இந்நிலையில், பீகார் மாநிலத்தின் கனாப்பூர் நிலையம் அருகே இன்று மாலை சுமார் 4 மணியளவில் இந்த ரயிலின் 4 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தரம்புரண்டன. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்பு இல்லை என முதல்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.

More News >>