தீபாவளி: ரயில்வே முன்பதிவு மையங்கள் அரை நாள் இயங்கும்

நவம்பர் 6ம் தேதி, செவ்வாய்க்கிழமை தீபாவளியன்று ரயில்வே முன்பதிவு மையங்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி காலை 8 முதல் பிற்பகல் 2 மணி வரை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தீபாவளியை முன்னிட்டு தென்னக ரயில்வே அதிகாரிகள் 49 இடங்களில் செய்த திடீர் ஆய்வின்போது, ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு செய்த உரிமம் இல்லாத முகவர்கள் 17 பேர் பிடிபட்டுள்ளனர். முறைகேடாக முன்பதிவு செய்யப்பட்ட 4 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 319 பயணச்சீட்டுக்களும், முன்பதிவு செய்ய பயன்படுத்தப்பட்ட 130 அடையாள அட்டைகளும் கைப்பற்றப்பட்டன.

More News >>