திரைப்பட பாணியில் கொள்ளை : சூதுகவ்வும் படத்தை மிஞ்சிய நெல்லைவாசி

நெல்லை மாவட்டத்தில் சூதுகவ்வும் திரைப்படம் போன்று கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் சூதுகவ்வும். இப்படத்தில் நடிகர் கருணாகரன் தனது தந்தையிடம் பணம் பறிக்க கடத்தல் நாடகத்தை அரங்கேற்றுவார். அதுபோன்று நெல்லைவாசி ஒருவர் தனது தந்தையிடம் இருந்து 30 இலட்சத்தைதிருடியுள்ளார்.

நெல்லை மாவட்டம் தென்காசியில், முகமது தாகா என்பவர் தனது நகைக்கடையில், வேலை செய்யும் பாலசுப்பிரமணியன் என்பவரிடம் 30 லட்சம் ரூபாயை கொடுத்து அதனை சென்னையில் உள்ள தனது மகனிடம் கொடுத்து நகைகளை வாங்கி வரும்படி கூறியுள்ளார்.

சென்னைக்கு பேருந்தில் புறப்பட்ட பாலசுப்ரமணியம், கொள்ளையர்கள் தன்னிடம் இருந்து பணத்தை பறித்துவிட்டு சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுக்குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் பல உண்மைகள் வெளியானது. நகை கடை உரிமையாளர் முகமது தாகாவின் மற்றொரு மகனான சையது ஜிலாமி தனது நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து காவல் துறையினர் சையதையும், அவரது நண்பர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற தந்தையிடமே மகன் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More News >>