விரைவில் சர்கார் ஹச்டி பிரிண்ட் சர்காருக்கு சவால் விடும் தமிழ் ராக்கர்ஸ்!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர்ந்திருக்கும் படம் சர்கார். கார்ப்பரேட் கிரிமினல் போன்ற அதிரடி பஞ்ச் வசனங்களுடன் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.

சர்கார் படத்திற்கான மினிட் பை மினிட் விளம்பரங்களும், கதை திருட்டு பஞ்சாயத்து விமர்சனங்களையும் விளம்பர யுக்தியாக மாற்றிய சன் பிக்சர்ஸ் சர்கார் படத்துக்கான எதிர்பார்ப்பை விஜய் ரசிகர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரிடையும் ஏகத்துக்கும் எகிரச்செய்துள்ளனர்.

இந்நிலையில், பட ரிலீஸ் அன்று தனது கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யக் கூடாது; அதற்கான செலவை ஆக்கபூர்வமான பணிகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாராம் விஜய்.

இது ஒரு புறமிருக்க, இப்படத்தை இணையத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், சன் பிக்சர்ஸ்-க்கு ஆதரவாக தீர்ப்பு வந்த நிலையில் தமிழ் ராக்கர்ஸ் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் டுவிட்டர் பக்கத்தின் மூலம் சர்கார் படத்திற்கு புதிதாக ஒரு சவால் முளைத்துள்ளது.

அந்த டுவிட்டர் பக்கத்தில், ‘சர்கார் ஹெச்டி பிரிண்ட் விரைவில்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்கார் ஆடியோ வெளியீட்டிற்கு முன்னதாக தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியிட்ட நிலையில் இந்த டுவிட்டால் மீண்டும் செய்வதறியாது திகைத்து வருகிறது சர்கார் டீம்.

More News >>