ரன் மெஷின் விராட் கோலி பிறந்தநாளுக்கு மணல் சிற்பத்தில் வாழ்த்து

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் பிறந்தநாளை முன்னிட்டு, மணல் சிற்பம் வரைந்து வாழ்த்துகளை தெரிவித்தார் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக்.

மகிழ்ச்சியோ, துக்கமோ தனது உணர்வினை மணல் சிற்பம் மூலம் அழகாய் வெளிப்படுத்தி வருபவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக். நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி மக்களின் மனங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி நேற்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இன்று நடைபெறவுள்ள தீபாவளி விழாவில் பங்கேற்க சுதர்சன் பட்நாயக் சென்றுள்ளார். அங்குள்ள மைதானத்தில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிக்கும்விதமாக பேட் மற்றும் பந்துடன் கூடிய விராட் கோலி மணல் சிற்பத்தை வரைந்து, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி அசத்தி உள்ளார். இந்த சிற்பத்தை பார்த்து விராட் கோலியின் ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.

More News >>