தாயாய் மாற அழகு குறிப்பு.. இது கமலின் பிறந்தநாள் கவிதை !

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது பிறந்தநாளை முன்னிட்டு உடல்தானத்தை வலியுறுத்தும் வகையில் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தாயாய் மாற அழகு குறிப்பு என்ற தலைப்பில் தனது குரலில் பதிவு செய்த கவிதை வீடியோ வைரலாகி வருகிறது.

தாயாய் மாற அழகு குறிப்பு...

மண்ணில் புதையவும் தீயில் கரியவும்

சொர்க்கம் செல்ல... உடலைப் போற்றி புழுக்க விடுவதும்

எத்தகைய நியாயம்! ஏது, இதில் லாபம்.

எனக்குப் பின்னால், எலும்பும் தோலும் உறுப்பும் எல்லாம்...

எவருக்கேனும் உயிர் தரும் என்றால்...

அதுவே ஷித்தி; அதுவே மோட்சம் என்றே நம்பும் சொர்க்கவாசி நான்.

மனிததோல் பதினைந்து கஜத்தில், ‘ஏழு ஜோடி செருப்புகள்’ தைத்தால்

அவை அத்தனையும் என்னைச் சொர்க்கம் சேர்க்கும்.

காண இன்பம் தொடர்ந்து காண்போம்; கண்ணைப் பிறரும் காணக் கொடுத்தால்.

காற்றடைத்த பையின் இடத்தில், இன்னொரு உயிரை வாழவிட்டால்...

ஆணாய் பிறந்த சோகம் போக்கி, தாயாய் மாறத் தேர்ந்துவிடலாம்.

மண்ணில் புதையவும் தீயில் கரியவும்

சொர்க்கம் செல்ல... உடலைப் போற்றி புழுக்க விடுவதும்

எத்தகைய நியாயம்.

ஏது இதில் லாபம்!

More News >>