சர்தார் வல்லபாய் படேல் சிலை குறித்து பிரிட்டன் எம்பி சர்ச்சை கருத்து

3000 கோடி ரூபாய் செலவில் சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை அமைத்திருப்பது முட்டாள்தனமானது என பிரிட்டன் எம்பி விமர்சித்துள்ளார்.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 182 மீட்டர் உயரத்தில் சர்தார் வல்லபாய் படேலுக்கு மத்திய அரசு சிலை அமைத்தது. சுமார் 3000 கோடி ரூபாய் செலவலில் நிறுவப்பட்டதற்கு எதிர்கட்சி உள்பட பலர் கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில், படேலில் சிலை குறித்து பிரிட்டன் நாட்டின் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் போன் விமர்சனம் செய்துள்ளார்.அவர் கூறியதாவது: மகளிர் மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட மேம்பாட்டிற்காக கடந்த 5 ஆண்டுகளில் பிரிட்டனிடம் இருந்து இந்தியா சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி பெற்றுள்ளதாகவும், அதேசமயத்தில், இந்தியா மிகப்பெரிய சிலை செய்வதற்கு ரூ.3000 கோடி செலவு செய்திருப்பது முட்டாள்தனமானது.

இந்த அளவுக்கு செலவு செய்து பிரமாண்ட சிலையை அவர்களால் செய்ய முடியும் என்றால், அந்த நாட்டிற்கு நாம் உதவி வழங்க தேவையில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

More News >>