நாட்டு வைத்தியம்:வேலூர் அருகே 9 மாத குழந்தை பலி!

வேலூர் அருகே குழந்தையின் வயிற்றுப் போக்கிற்காக நாட்டு மருந்து கொடுத்துள்ளார்கள் அதன் பக்க விளைவின் காரணமாக ஒன்பது மாத குழந்தை பலியாகிய சம்பவம் அனைத்து பெற்றோர்களுக்கும் ஒரு எச்சரிக்கை மணிதான்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சக்தி என்பவரின் ஒன்பது மாத ஆண் குழந்தைக்கு தொடர் வயிற்று போக்கு பிரச்ச்னை சரிசெய்வதற்கு நாட்டு மருந்து கொடுத்துள்ளார்கள்.

மருந்தை தாழையாத்தம் பகுதியில் உள்ள நாட்டு மருந்து கடையில் வாங்கி கொடுத்துள்ளார்கள், மருந்து குடுத்த சில நேரத்திலேயே குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதை கண்ட பெற்றோர் அதிர்ச்சியில் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர் ஆனால் வழியிலேயே குழந்தை இறந்துவிட்ட பரிதாப சம்பவம் ஏற்பட்டது.

நாட்டு மருந்தை பெரியவர்கள் பயன்படுதும்போது கூட பக்கவிளைவுகள் ஏற்படும் என்று ஜாக்கிரதையாக குடுப்பார்கள் ஆனால் ஒரு சிறு குழந்தைக்கு எவ்வாறு எந்தவித மருத்துவ பரிசோதனையும் செய்யாமல் நாட்டு மருந்து குடுத்தார்கள் என்று தெரியவில்லை போலீசார் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

மருந்து ஆண்,பெண், குழந்தைகள், வயது என வித்தியாசப்படும், அவர்களின் உடல் நிலை ஜீரண சக்தியை பொறுத்தும் மருந்துகள் மாறுபடும் எனவே மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் எடுத்துக்கொள்ள வேண்டாம்.

More News >>