குஜராத்தில் 16 வயது மாணவி உடலெங்கும் கத்தியால் குத்தி படுகொலை!

குஜராத் மாநிலத்தின் உள்ள உனா பகுதி அருகே 16 வயது மாணவியின் உயிரற்ற சடலம் சாலையில் கிடந்ததை பார்த்த மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீஸ் விசாரனையில் கொலை செய்யப்பட மாணவி குஜராத் கோடினார் பகுதியில் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார் எனவும் சம்பவதிற்கு முன்தினம் போனில் பேசிக்கொண்டே மாணவி விட்டில் இருந்து கிளம்பியுள்ளார், ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை, அவர்டுடைய போன் ஸ்ட்விச் ஆப் செய்யப்பட்டுள்ளதயை தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் அந்தப் பகுதிகளில் உள்ள இடங்களில் தேடி பார்த்து பின்பு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளர்கள்.

இந்நிலையில் மாணவியின் உடல் நேற்று காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் அப்பெண் 3-க்கு மேற்பட்ட நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதும், மேலும் 35க்கும் மேற்பட்ட இடங்கள் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள்.

More News >>