ஸ்டாலினுடன் காங். மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் சந்திப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய்த் தத் இன்று சந்தித்து பேசினார்.

தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணியை உருவாக்க எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு பல்வேறு கட்சித் தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்.

சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்திரபாபு நாயுடு நேற்று சந்தித்து பேசினார். அப்போது மெகா கூட்டணியில் திமுக இடம் பெறும் என ஸ்டாலினும் உறுதி அளித்திருந்தார்.

இந்த நிலையில் சென்னையில் இன்று ஸ்டாலினை காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது இடைத் தேர்தல்கள், லோக்சபா தேர்தல்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

More News >>