அரசியல் கட்சி தொடங்கும் சந்தனக்காடு வ.கெளதமன்

திரைப்பட இயக்குநர் வ. கெளதமன் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்திருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பை நாளை ஞாயிற்றுக்கிழமை வெளியிடுவதாக தெரிவித்துள்ளார் கெளதமன்.

மக்கள் தொலைக்காட்சியில் சந்தனக்காடு என்ற பெயரில் வீரப்பன் வரலாற்றை தொடராக வெளியிட்டதன் மூலம் பரவலாக அறியப்பட்டவர் கெளதமன். பின்னர் மகிழ்ச்சி என்ற திரைப்படத்தை இயக்கினார்.

இதனைத் தொடர்ந்து தமிழர் நலன்சார்ந்த பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றார். இதனால் சிறைவாசமும் அனுபவித்தார். அதே நேரத்தில் தமிழ் உணர்வாளர்களான நெடுமாறன், வேல்முருகன், சீமான் உள்ளிட்டோரின் இயக்கம், கட்சிகளில் கெளதமன் இணையாமல் தனித்தே இயங்கி வந்தார்.

மாணவர் அமைப்புகளுடன் இணைந்து போராட்டங்களை கெளதமன் முன்னெடுத்தார். இந்த நிலையில் ஊடகங்களுக்கு இன்று கெளதமன் அனுப்பிய அறிக்கையில், எங்களின் அடுத்தக்கட்ட நகர்வாக அரசியல் கட்சியாக உருவெடுக்கும் பிரகடனத்தை அறிவிப்பதற்காக அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.

எப்பொழுதும் போல தங்களின் மேலான ஆதரவினை தந்துதவும்படி உரிமையோடு வேண்டுகிறேன் என்று கெளதமன் தெரிவித்துள்ளார்.

More News >>