இவனை என்ன செய்யலாம்? பெற்ற மகளை கர்ப்பமாக்கிய கொடூர தந்தை

போதும் உங்கள் பாலியல் வன்முறை. பாரபட்சமின்றி தன் பெற்ற மகளையே பலமுறை பாலியல் வன்புணர்வு செய்து கர்ப்பமாக்கிய தந்தையை என்ன செய்வது?

திண்டுக்கல் மாவட்டம்,  ஒட்டனசத்திரத்தின் அருகே நரிப்பட்டி எனும் கிராமம் உள்ளது. இவ்வூரைச் சேர்ந்தவர் பாலமுருகன். அவரது மனைவி ஜோதி. இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து தன் வாழ்க்கையை நடத்துகின்றனர். இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகளும் உள்ளார்.

பாலமுருகனின் மனைவி அடிக்கடி ஊருக்கு செல்வது வழக்கம். இவ்வாய்ப்பை பயன்படுத்தி பாலமுருகன் தனது மகளை வற்புறுத்தி, அடித்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். தன் மனைவி ஊரிலிருந்து வீட்டிற்கு வரும் வரை நாள் தோறும் பல முறை பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ளார்.

இதனை அறியாத அவரது மனைவி, தன் மகள் கர்ப்பம் அடைந்ததை கண்டுபிடித்துள்ளார். அதன்பிறகு தன் மகளிடம் விசாரிக்கும்போது, வேறு வழியின்றி அனைத்து உண்மைகளையும் தாய் ஜோதியிடம் கூறியுள்ளார்.

இதனை கேட்டு பெரும்அதிர்ச்சி அடைந்த தாய், ஒட்டன்சத்திரம் அனைத்து காவல் நிலையத்தில் தனது கணவர் மீது புகார் அளித்துள்ளார். காவல் துறையினர் பால முருகனை கைது செய்தனர். மேலும் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து திண்டுக்கல் சிறைச்சாலையில் அடைத்துள்ளனர்.

More News >>