கமல் ஓவராக பேசுகிறார் - கொதித்தெழுந்த பவர் ஸ்டார் சீனிவாசன்

ஆர்.கே.நகர் மக்களை அவமானப்படுத்தியுள்ளார். அதிகமாகவும், அநாகரிகமாகவும் நடிகர் கமல் பேசுகிறார் என்று பவர் ஸ்டார் சீனிவாசன் கூறியுள்ளார்.

‘ஆனந்த விகடன்’ இதழுக்கு எழுதிவரும் தொடரில், கூறியுள்ள கமல்ஹாசன். “ஆ.கே.நகர் இடைத்தேர்தல், ஆகப்பெரிய களங்கம். தமிழகத்துக்கு, தமிழக அரசியலுக்கு, அவ்வளவு ஏன், இந்திய ஜனநாயகத்துக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள மிகப்பெரிய களங்கம். அதுவும் வெளிப்படையாக நடந்த, விலைக்கு வாங்கப்பட்ட வெற்றியை ஊழல் என்றுகூட சொல்லமாட்டேன்.

தங்களின் தலைக்கு அதிக விலை நிர்ணயித்த சுயேச்சையை, ‘தங்களின் தேவைகளைத் தீர்க்க வந்த தேவன் வந்துவிட்டான்’ என்று பொத்தானை அழுத்தி, தங்களுக்குத் தாங்களே உலைவைத்துக் கொண்டுள்ளனர் ஆர்.கே.நகர் வாசிகள்” என்று தெரிவித்து இருந்தனர்.

கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு தினகரன் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமலை கண்டித்து தினகரனின் ஆதரவாளர்கள் அவரது கொடும்பாவியை எரித்து போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் இது குறித்து திரைப்பட வர்த்தக கருத்தரங்கில் கூறியுள்ள நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், “ஆர்.கே.நகர் மக்களை அவமானப்படுத்தியுள்ளார். அதிகமாகவும், அநாகரிகமாகவும் நடிகர் கமல் பேசுகிறார். ரஜினியின் அரசியல் பயணத்தை மக்கள் முடிவு செய்வார்கள் என்றும் பவர் ஸ்டார் கூறியுள்ளார்.

More News >>