திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் சி.பி.எம். சீதாராம் யெச்சூரி!

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

நாடாளுமன்றம் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், எதிர்கட்சித் தலைவர்கள் ஒன்று சேர்ந்து மெகா கூட்டணி அமைக்கும் வகையில், கடந்த 9ம் தேதி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரடியாக சந்தித்து பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் இல்லத்திற்கு சென்றார். அங்கு, யெச்சூரியக்கு ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து பொன்னாடை போர்த்தி வரவேற்றார். பிறகு ஸ்டாலினுடன் யெச்சூரி பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். கனிமொழி எம்.பி., ஆ.ராசா, திருச்சி சிவா உள்ளிட்டோர் இவர்களுடன் இருந்தனர்.

More News >>