ஜோதிகாவின் இந்த அட்வைஸ் ஏ.ஆர். முருகதாஸுக்கா?

நடிகையரை ஜோக்கர் போல காட்டாதீர்கள் என ஜோதிகா கூறியுள்ளார். சமீபத்தில் ரிலீசான சர்கார் படத்தை பார்த்து தான் ஜோதிகா இதனை தெரிவித்தாரா என சர்ச்சை வெடித்துள்ளது.

ஜோதிகா நாயகியாக நடித்துள்ள காற்றின் மொழி விரைவில் திரைக்கு வருகிறது. இந்த படத்தை ஜோதிகாவின் மொழி படத்தை இயக்கிய ராதா மோகன் இயக்கியுள்ளார். நேற்று படத்தில் இடம்பெற்ற ஜோதிகா வெர்ஷன் ஜிமிக்கி கம்மல் பாடல் வெளியாகி ட்விட்டரில் இந்திய அளவில் டிரெண்டானது.

இந்நிலையில், ஜோதிகா அளித்த ஒரு பேட்டியில், “நடிகையரை ஜோக்கர் போல காட்டாதீர்கள்” காட்டாதீர்கள்” என கூறியுள்ளார்.

சமீபத்தில், வெளிவந்த விஜய்யின் சர்கார் திரைப்படத்தில் நாயகி கீர்த்தி சுரேஷுக்கு முக்கியத்துவம் வழங்காதது குறித்து அனைத்து விமர்சகர்களும் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது. அதிலும், கத்தி படத்தில் சமந்தா கதாபாத்திரத்தை சித்தரித்ததை போலவே ஏ.ஆர். முருகதாஸ் இந்த படத்திலும் கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளார் என்ற ஓபன் கமெண்ட்டுகள் வந்த நிலையில் உள்ளன.

நடிகையர் திலகம் போன்ற நடிப்பு திறமையை காட்டும் படத்தில் அற்புதமாக நடித்து அசத்திய கீர்த்தி சுரேஷுக்கு இதுபோன்ற கதாபாத்திரங்கள் இனிமேலும், இயக்குநர்கள் உருவாக்க வேண்டாம் என்று சூசகமாக ஜோதிகா சொல்லியிருப்பது இதிலிருந்து தெரிகிறது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் தற்போது ஜோதிகா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More News >>