இத்தாலியில் கோலாகலமாக நடைபெற்ற தீபிகா ரன்வீர் திருமணம்!

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் திருமணம் இத்தாலியில் இன்று நடைபெற்றது.

கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்த இந்த திரை ஜோடியினர் தற்போது ரியல் ஜோடிகளாக மாறியுள்ளனர். ராம்லீலா படத்தில் இணைந்து நடித்த போதே இருவருக்குள்ளும் காதல் மலர்ந்து விட்டது.

சஞ்சய் லீலா பன்சாலியின் பிரம்மாண்ட படங்களான பாஜிராவ் மஸ்தானி மற்றும் பத்மாவத் திரைப்படங்களில் இருவரும் இணைந்து நடித்து பல விருதுகளை வென்றனர்.

இத்தாலியின் லேக் கோமாவில் உள்ள வில்லா டெல் பால்பினெல்லோ எனும் மாளிகையில் இந்து முறையான கொங்கணி முறைப்படி நடைபெற்றது. திருமண விழாவின் அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

மேலும், இந்த திருமணத்தில் குறிப்பிட்ட 40 பேர் மட்டுமே கலந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹர், தீபிகா – ரன்வீர் திருமணம் நிறைவடைந்ததாக ட்விட்டரில் அறிவித்தார்.

மும்பையில் பாலிவுட் நட்சத்திரங்கள் புடைசூழ வரவேற்பு விழா இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளது.

More News >>