கஜா புயல் எதிரொலி: 18 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கஜா புயல் தாக்கத்தால், தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் நாகை - வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. இதன் எதிரொலியாக, பல்வேறு மாவட்டங்களில் சூறைக்காற்றுடன், பலத்த மழை பெய்து வருகிறது. மக்கள் வெளியே வரமுடியாத அளவிற்கு புயலின் தாக்கம் உள்ளதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, நாகை, கடலூர், ராமநாதபுரம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை, தேனி, மதுரை, அரியலூர், திண்டுக்கல், விழுப்புரம், கரூர், சேலம், திருவண்ணாமலை, பெரம்பலூர் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர், தூத்துக்குடி, ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

More News >>