யூடியூப் மூலம் ஏ.ஆர்.ரகுமானை கவர்ந்த காந்தக்குரலுக்கு படத்தில் பாட வாய்ப்பு !

யூடியூபில் தனது காந்தக்குரல் மூலம் ஏ.ஆர்.ரகுமானை திரும்பி பார்க்க வைத்த ஆந்திராவை சேர்ந்த கிராமத்து பெண்ணுக்கு தெலுங்கு திரைப்படத்தில் பாட வாய்ப்பு கிடைத்துள்ளது.

சினிமாவில் வரும் பாடல்களை பாடி வீடியோ வெளியிட்டு அதன் மூலம் பிரபலமானவர்கள் பலர். அந்த வகையில், ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த பேபி என்ற பெண், காதலன் படத்தில் வரும் என்னவளே பாடலின், தெலுங்கு வர்ஷனான ஓ செலியா என்ற பாடலை பாடி யூடியூபில் வீடியோ வெளியிட்டார். இந்த பாடல் பதிவேற்றப்பட்ட 10 மணி நேரத்தில் 7 லட்சம் வியூவ்ஸ் கிடைத்து சாதனை படைத்துள்ளது.

மேலும், இந்த வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது பேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்து, அருமையான குரல் என்று பாராட்டி உள்ளார்.இந்நிலையில், பேபியின் காந்தக்குரலால் ஈர்க்கப்பட்டு தெலுங்கு இசையமைப்பாளர் சலூரி கோட்டீவர ராவ், பேபிக்கு தனது இசையில்  திரைப்படத்தில் பாட வாய்ப்பு அளிப்பதாக கூறியுள்ளார்.

இந்த பெண்ணுக்கு வாய்ப்பு கிடைக்க காரணமாக இருந்த ஏ.ஆர்.ரகுமானுக்கு ரசிகர்கள் பாராட்டுகளை குவித்து வருகின்றனர்.

More News >>