புதுக்கோட்டையில் மின்சாரம் சீராக ஒரு வாரமாகும் ?

கஜா புயலின் தாக்கத்தால், புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மின்சாரம் வர இன்னும் ஒரு வாரமாகும் என்று கருதப்படுகிறது.

தமிழகத்தில் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதை தவிர, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மின் பாதிப்பு மற்றும் சேதங்கள் அதிகளவில் உள்ளதால் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இதனால், பெரும்பாலும் சீரமைப்பு பணிகள் முடித்து இன்றைக்குள் மின்சாரம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும், புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ஒரு வாரத்திற்குள் மின்சாரம் வந்துவிடும் என்று கூறப்படுகிறது.

More News >>