கஜா பாதிப்பு எதிரொலி: இன்றைய அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து

கஜா புயல் பாதிப்பால் இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கஜா புயலால் நாகை, தஞ்சாவூர், திருவரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. பல இடங்களில் மழை நீர் தேங்கியும், மின்சாரம் துண்டிப்பும் ஏற்பட்டுள்ளத. இதனால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப ஓரிரு நாட்கள் ஆகும் என்பதால், இன்று நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும், ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் அனைத்தும் வரும் டிசம்பர் மாதம் 15ம் தேதி நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

More News >>